2026 தொகுதி மறுவரையறை 8 தொகுதிகளை இழக்கும் தமிழ்நாடு?!..

2026 தொகுதி மறுவரையறை 8 தொகுதிகளை இழக்கும் தமிழ்நாடு?!..

மக்கள்தொகை அடிப்படையில் 2026-ம் ஆண்டுக்குப் பிறகு, மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்போது, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்றும், உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களின் மக்களவைத்\ தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் கார்னெகி மையம் (Carnegie Report) ஓர் அதிர்ச்சிகரமான ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

இந்நிலையில், கார்னெகி மையம் (Carnegie Report) வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில், தென்னிந்திய மாநிலங்களைவிட வடஇந்திய மாநிலங்களில் மக்கள்தொகை வளர்ச்சி என்பது மிகவும் வேகமாக இருக்கிறது.

மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்பதால், ஒப்பீட்டளவில் வடஇந்திய மாநிலங்களில் தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதேசமயம் மக்கள்தொகை கட்டுக்குள் இருக்கும் தென் மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகள் கணிசமாகக் குறையும். அதாவது, இப்போது இருக்கும் தொகுதிகளில் பெரும் இழப்பு நேரிடும்” என அதிர்ச்சி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், வருகின்ற 2026-க்குப் பிறகு மக்கள்தொகை கணக்கிடப்பட்டு, அதனடிப்படையில் செய்யப்படும் மக்களவைத் தொகுதிகள் மறுவரையறையில், வட மாநிலங்கள் கூடுதலான தொகுதிகளைப் பெறும். குறிப்பாக, இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் தற்போது 80 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. ஆனால், தொகுதி மறுவரையறைக்குப் பின்னர் கூடுதலாக 11 தொகுதிகளைப் பெற்று, உ.பி-யின் மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கை 91-ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, தொகுதி மறுவரையறைக்குப் பின்னர் இப்போது இருக்கும் தொகுதிகளைவிடக் கூடுதலாக பீகார் மாநிலம் 10 தொகுதிகளையும், ராஜஸ்தான் மாநிலம் 6 தொகுதிகளையும், மத்தியப் பிரதேசம் 4 தொகுதிகளையும் பெறும். அதேபோல குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், டெல்லி (யூனியன் பிரதேசம்), சத்தீஸ்கர் உள்ளிட்ட வட மாநிலங்களும் தலா 1 மக்களவைத் தொகுதியை அதிகமாகப் பெறும்” என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

அதேசமயம்,ஹநாம் இருவர் நமக்கு இருவர்’ என மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை பொறுப்புணர்வுடன் செயல்படுத்திய தென் மாநிலங்கள், அந்தப் பொறுப்புணர்வுக்காகவே தண்டிக்கப்படவிருக்கின்றன. அதாவது, இருக்கும் தொகுதிகளையும் கணிசமாக இழக்கப்போகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு மாநிலம் தற்போது 39 மக்களவைத் தொகுதிகளை வைத்திருக்கிறது.

ஆனால், 2026-க்குப் பிறகான மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பால் கிட்டத்தட்ட 8 மக்களவைத் தொகுதிகளை இழக்கும். தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை வெறும் 31-ஆகக் குறையும். தமிழ்நாட்டைப்போலவே தென் மாநிலங்களான கேரளா 20லிருந்து 8 தொகுதிகளை இழந்து 12-ஆகச் குறைய வாய்ப்புள்ளன.

“ஆந்திரா-தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 42 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில், அவை 34-ஆகக் குறையும். கர்நாடகாவும் தற்போதைய 28-லிருந்து 2 இடங்களை இழந்து 26 இடங்களாகச் சுருங்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது” என்று கார்னெகி அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..