நிர்வாண வீடியோவில் நான் நடித்ததாக சித்ரவதை ஆந்திரா பெண் அமைச்சர் நடிகை ரோஜா கண்ணீர் மல்க பேட்டி.

நிர்வாண வீடியோவில் நான் நடித்ததாக சித்ரவதை ஆந்திரா பெண் அமைச்சர் நடிகை ரோஜா கண்ணீர் மல்க பேட்டி.

தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான பண்டாரு சத்திய நாராயணமூர்த்தி அமைச்சர் ரோஜா குறித்து இழிவான கருத்துக்களை தெரிவித்து இருந்தார் இது ஆந்திராவை தவிர்த்து இந்திய அரசியலை பரபரப்பை ஏற்படுத்தியது

இந்நிலையில் ஆந்திரா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் நடிகை ரோஜா திருப்பதியில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது : நான் நிர்வாண படத்தில் நடித்ததாக கூறி சித்ரவதை செய்கின்றனர். சட்டசபையிலும் சிடிக்கள் காட்டபட்டன

ஆனால் சிடியில் இருப்பது நான் தான் என நிரூபிக்கபடவில்லை பெண்கள் தங்கள் விருப்படி வாழ வேண்டும் என்று டெல்லி உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் என் குணத்தை மதிப்பிட நீங்கள் யார்? தெலுங்கு தேசம் கட்சி பெண்களை விளையாட்டு பொருளாக நடத்துகின்றன. ( கண்ணீர் விட்டு கதறி அழுதார் ) உங்கள் வீட்டில் உள்ள பெண்களை பற்றி இப்படி பேசினால் ஏற்று கொள்வீர்களா?

முன்னாள் அமைச்சர்கள் காந்த சீனிவாஸ் அய்யண்ண பத்ரா சந்திரபாபு நாயுடு லோகே~; ஆகியோரை கண்டிக்காதது ஏன்? தெலுங்கு தேசம் ஒரு திரையுலக பிரமுகரால் நிறுவபட்ட கட்சி பண்டாரூ சத்தியநாராயணின் பேச்சுக்கு அவரது மனைவி தன் கணவனை அறைந்துருக்க வேண்டும்.
லோகேஷ் வெட்கமின்றி டிவிட் செய்கின்றார். சந்திரபாபு நாயுடு என்னை பிரச்சாரத்திற்கு அழைத்தது ஏன்? நான் கெட்டவள் என்றால் என்னை ஏன் கட்சியில் சேர்த்தார் என்னை அயன் லெக் என்று கேளி செய்தார்கள்

உங்கள் கட்சியில் இருந்தால் நல்லவள்

நான் உங்கள் கட்சியில் இருக்கும் போது எப்படி நல்லவராகவும் வேறு கட்சியில் இருக்கும் போது கெட்டவராக இருக்க முடியும் பண்டாரூ சத்தியநாராயணமூர்த்தி கருத்து தன்னை மிகவும் புண்படுத்தியுள்ளன. கேள்வி கேட்டால் என்னை தாக்கி பேசுவார்களா? சந்திரபாபு நாயுடுவை கைது செய்தால் ஏன் அழுகீர்கள் தெலுங்கு தேசம் கட்சியில் பெண்களுக்கு மரியாதை இல்லை தெலுங்குதேசம் கட்சியால் அரசியல் ரீதியாக வளரமுடியாது பண்டாரூ சத்தியநாராயணமூர்;த்தி மீது மானந~;ட ஈடு வழக்கு தொடர உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


அமைச்சர் ரோஜா பேசிய வீடியோ தற்போது சமூக வளைதலங்களில் வைரலாகி வருகின்றன. ஆந்திராவில் பெண் அமைச்சர் ஓருவர் கலங்கி அழுதபடி பேட்டி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதனையொடுத்து நடிகை ரோஜா குறித்து அவதூறு பேசியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து பண்டாரூ சத்தியாநாராயணமூர்த்தியை கைது செய்துள்ளனர்.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..