திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி தங்கும் விடுதிகளின் கட்டணம் பல மடங்கு உயர்வு என தகவல்…?

திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி தங்கும் விடுதிகளின் கட்டணம் பல மடங்கு உயர்வு என தகவல்…?

திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை தங்கும் விடுதிகளில் வழக்கத்தை விட பத்து மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது..

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக தமிழகம் மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தீபத்தை தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..

திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் விடுதியில் தங்கி தீப தரிசனம் காண இருப்பதால் மலையைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் 25 ஆம் தேதி மட்டும் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.. சாதாரண நாட்களில் ஒரு அறைக்கு 1000, 2000, 3000 என்று கட்டண வசூல் செய்து வந்த நிலையில் கார்த்திகை தீபத் திருநாளன்று பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கின்றனர் என்று தெரிய வருகிறது..

வெளியூர் பக்தர்கள் வேறு வழியின்றி இவர்களை கேட்கும் கட்டணத்தைக் கொடுத்து பக்தர்களும் தங்கி வருகின்றனர்..

மேலும் ஒரு ஏசி அறைக்கு சாதாரண நாட்களில் 1500 ரூபாய் வாங்கும் நிலையில் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் 5000 முதல் 15000 ஆயிரம் வரை விடுதிகளுக்கு தகுந்தவாறு தாருமாறாக கட்டணத்தை உயர்த்தி பக்தர்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.

இவ்வளவு கட்டணம் கொடுத்து தங்க வேண்டுமா என்று பொது மக்களிடம் கேள்வி எழுப்பிய போது. என்ன செய்வது இங்கு வந்து விட்டோம் இவர்கள் கேட்பதை கொடுத்தாவது தங்க வேண்டும் வேறு எப்படி தங்குவது என்பதே தெரியவில்லை வேறு வழியில்லாமல் தான் கொடுக்கிறோம் என்று மன வருத்தத்துடன் தெரிவித்தனர்..

இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..