சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அனைத்து துறை செயலாளருக்கும் சுற்றறிக்கை அனுப்பிய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்து உள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தனக்கு வழங்க வேண்டிய பணி உயர்வு பண பலன் முறையாக வழங்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை முறையாக நிறைவேற்றாத அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் அய்யனார் முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந் 2021 ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில் மனுதாரர், “தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதி பஞ்சாயத்து நிர்வாக இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தேன். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் எனக்கு வழங்க வேண்டிய உரிய பணி உயர்வு மற்றும் பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2016 வழக்கு தொடர்ந்தேன்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி எனக்கு பணி வழங்கி பணி நீக்கம் செய்யப்பட்ட இடைப்பட்ட காலத்திற்கு 25% ஊதியம் வழங்கவும் கடந்ர 2020 ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவு தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்றம், “ஐஏஎஸ் ஆட்சி பணி மூத்த தலைமை அதிகாரி எதிர்மனுதாரராக இருந்தும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தற்போது வரை எந்தவித பதில் மனுவோ விளக்கமோ அளிக்கப்படவில்லை. இதிலிருந்து நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது ஆச்சரியமாகவும் விசித்திரமாகவும் உள்ளது.