திமிரி அருகே 9ம் வகுப்பு மாணவியை ஆசைவார்த்தை கூறி உடலுறவு கொண்ட ஸ்வீட் மாஸ்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

திமிரி அருகே 9ம் வகுப்பு மாணவியை ஆசைவார்த்தை கூறி உடலுறவு கொண்ட ஸ்வீட் மாஸ்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி அருகே வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி பலமுறை உடலுறவு கொண்ட ஸ்வீட் மாஸ்டரை ராணிப்பேட்டை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திமிரி அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த மோகன்தாஸ் (38). வேலூரில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றில் சரக்கு மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

மேலும் இவரது மனைவி உஷா கடந்த ஆண்டு நோய்வாய் பட்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு வரவைத்து பலமுறை உடலுறவு கொண்டுள்ளார்.

மேலும் சிறுமியின் நடத்தையில் சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தது போது நடந்ததை கேட்டு அதிர்ச்சியடைந்தனர் இதனையொடுத்து சிறுமியின பெற்றோர்கள் ராணிப்பேட்டை மகளிர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் விசாரணை நடத்தினர்.

இதில் விசாரணையில் சிறுமியை ஏமாற்றியது உறுதியானதை தொடர்ந்து, மோகன்தாஸ் என்பவரை போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..