திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் ஆரணிபாளையம் சாந்தா தெரு பகுதியை சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ்(28) எலக்ட்ரானிக் மெக்கானிக் தொழில் செய்து வந்துள்ளார்.
இவருக்கு திருமணமாகி மகாலட்சுமி (23) என்ற மனைவியும் லியாஸ்ரீ என்ற 1 1/2 வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். தற்போது மகாலட்சுமி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
மேலும் விக்னேஷிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும் மது போதையில் அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக முன் விரோதம் இருந்துள்ளதான.
இதனால் விக்னேஷ் கடந்த மாதம் 15ந் தேதியன்று இரவு பணியை முடித்து விட்டு வீட்டிற்கு வரும் வழியில் புதுகாமூர் சாலையில் மது அருந்தி கொண்டிருந்த வழக்கறிஞர் 1).கணேஷ் அவரது தம்பி 2).ரமேஷ் 3).பிரசாந்த், 4). அசோக்குமார், 5).கமல், 6). தனபால், 7). தினேஷ்குமார், 8). தாமோதரன் 9). சந்தோஷ்குமார். ஆகியோர் விக்னேஷ் வழிமறித்து தகராறில் ஈடுபட்டு மது போதையில் இருந்த அந்த கும்பல் கல்லால் தாக்கியும் முகம், மார்பு, வயிறு, உள்ளிட்ட பகுதிகளில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் விக்னேஷ் சம்பவடத்திலேயே பலியானார்.
மேலும் ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிந்து சம்மந்தபட்ட குற்றவாளிகளை அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி இக்கொலை சம்மந்தமான வழக்கில் வக்கீல் கணேஷ் உள்ளிட்ட ஆகிய 9 பேரை கைது செய்து நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
பின்னர் விக்னேஷின் கொலை வழக்கில் ரமேஷ் தனபால் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த நிலையில் விக்னேஷ் கொலை வழக்கில் மூலையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான வக்கீல் கணேஷ் சிறையில் உள்ள நிலையில் தற்பொழுது அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆவணங்களை போலீசார் வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆரணியில் வழக்கறிஞர் ஒருவர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ள நிலையில் வழக்கறிஞர்கள் மத்தியில் பரபரப்பாக காணப்படுகிறது…