காந்தி ஜெயந்தி முன்னிட்டு கதர் கிராமிய தொழிலை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு சார்பாக பொதுமக்களுக்கு இலவசமாக கதர் ஆடைகள் வழங்கப்பட்டது

காந்தி ஜெயந்தி முன்னிட்டு கதர் கிராமிய தொழிலை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு சார்பாக பொதுமக்களுக்கு இலவசமாக கதர் ஆடைகள் வழங்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் சட்டமன்றத் தொகுதி மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் சார்பாக காந்தி ஜெயந்தி முன்னிட்டு

கதர் கிராமிய தொழிலை ஊக்குவிக்கும் விதமாக இலவசமாக பொதுமக்களுக்கு கதர் ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்நிகழ்ச்சியை மத்திய அரசு நலத்திட்ட பிரிவு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் கார்த்திக்குமார் தலைமை தாங்கினார் நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் அருள் வேல் முன்னிலை வகித்தார் நகரத் தலைவர் கே வி ஆர் வெங்கட்ராமன் , மண்டல பார்வையாளர் லட்சுமணன் மாவட்ட துணை தலைவர் அருள் பூங்காவனம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்

மேலும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் சைதை வ. சங்கர் பொதுமக்களுக்கு இலவசமாக கதர் ஆடைகளை வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..