ஆரணி அருகே இறந்தவரின் உடலை கொண்டு செல்ல மயானபாதை இல்லாமல் விவசாய நிலத்தில் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஆரணி அருகே இறந்தவரின் உடலை கொண்டு செல்ல மயானபாதை இல்லாமல் விவசாய நிலத்தில் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஆரணி அருகே பனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட  ஒகையூர் கிராமத்தில் 400 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

மேலும் இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக இறந்தவர்கள் உடலை கொண்டு செல்ல மயானபாதை இல்லாமல் விவசாய நிலைகளில் இறங்கி சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில்  நேற்று ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (50) என்ற முதியவர் உடல்நிலை குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தை உறவினர்கள் விளைநிலங்களில் சிரமப்பட்டு கொண்டு சென்றனர்.

இதனால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒகையூர் கிராமத்தில் இறந்தவரின் சடலத்தை கொண்டு செல்ல மயான பாதை அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..