திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு ஊராட்சியில் பூண்டி 1008 பொன்னெயில் நாதர் ஜிநாலயம் பஞ்சகல்யாண மஹோற்சவ பெருவிழா பூண்டி ஜினாலய அறங்காவலர் தலைவர் நேமிராஜ் அனைவரையும் வரவேற்றார்.
இதில் இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலை வகித்தனர். தவளகீர்த்தி மற்றும் லட்சுமிசேன பட்டாரக பட்டாச்சார்ய வர்ய மஹா சுவாமிகள் தலைமை தாங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக ஆரணி எம்.பி தரணிவேந்தன், எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் 3 நாட்கள் நடைபெறும் பஞ்சகல்யாண மஹோற்சவ பெருவிழா நிகழ்வில் வெள்ளிக்கிழமை அன்று நாந்தி மங்கலம் இந்திர பிரதிஷ்டை கொடியேற்றம் கங்கனபந்தனம் பாலிகை விடுதல் வாஸ்து விதானம் மற்றும் 16 கனவுகள் ஜினமாதாசேவா சகிதம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.
இதனையடுத்து இரண்டாம் நாளில் ஜினபாலகன் ஜனனம் ஜென்ம கல்யாணம் மற்றும் கெண்டை மேள தாளத்துடன் 100க்கும் மேற்பட்டோர் ஆடல் பாடலுடன் நடனமாடி ஐராவத யானையின் மீது ஜினபாலகன் சிலை வைத்து ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்தனர்.
இதனை தொடர்ந்து பாண்டுக சிலை மீது ஜன்மாபிஷெகம் செய்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் அரங்கேறி பஞ்ச கல்யாண மஹோற்சவ பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் அதிமுக ஒன்றிய செயலாளர் கஜேந்திரன், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் பாரி பாபு நகர மன்ற தலைவர் ஏ.சி. மணி, தாஸ் ஸ்டோர் சிவக்குமார் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.