சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு நீரை, கர்நாடகா அரசு விகிச்சார அடிப்படையில் தினந்தோறும் திறந்துவிட மத்திய, மாநில நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து, நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய பங்கீட்டு நீரை விகித்தசார அடிப்படையில் நாள்தோறும் திறந்து விட வேண்டும் தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு நீரை கர்நாடக அணைகளில் தேக்கி வைக்க எந்த விதமான தார்மீக உரிமையும் கர்நாடகவிற்கு இல்லை.
அதே போல மழைக்காலங்களில் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறந்து விடுவதை தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரின் அளவாக கணக்கில் எடுத்து கொள்ளக்கூடாது. ஆனால் கர்நாடக அரசு உபரிநீரை கணக்கில் எடுத்து கொண்டு கணக்கு சொல்வதை ஓரு போதும் தமிழ்நாட்டு விவசாயிகள் ஏற்கமாட்டார்கள்.
தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் நலன் கருதி குறுவை நெல் சாகுபடி செய்ய வருகின்ற ஜீன்-12ந் தெதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கபடும் என்று சென்ற வாரம் சட்டசபையில் அறிவிக்கபட்டது.
இந்த அறிவிப்பு காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் மனதுக்கு மகிழ்ச்சியை தரும் வகையில் இருந்தாலும் கர்நாடாக அரசிடம் இருந்து கடந்த ஆண்டு பெற வேண்டிய நிலுவையில் உள்ள பங்கீட்டு தண்ணீர் மற்றும் இந்தாண்டு ஏப்ரல்இ மே மாதங்களில் பெற வேண்டிய பங்கீட்டு தண்ணீரை பெற்ற பிறகு ஜீன்12ந் தேதி தமிழ்நாடு அரசு மேட்டூர் அணையில் இருந்து குறுவை நெல் சாகுபடி செய்ய தண்ணீர் திறந்தால் சாகுபடி முழுமையாக்கும் தேவையான தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யும் எனவும்
தமிழ்நாடு அரசு கர்நாடக அரசிடம் உரிய பங்கீட்டு நீரை கேட்டு பெறாமல் குறுவை நெல் சாகுபடி செய்ய மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்தால் போதிய தண்ணீர் கிடைக்காமல் தமிழக டெல்டா பாசன விவசாயிகள் பலத்த ந~;டத்தை சந்திக்க நேரிடும் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை வழங்குவதற்கு மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.