ஆரணி டவுன் காந்தி சிலை அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் ஜெயவேல் தலைமையில் கட்சியினர் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 28 பேரின் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் மாநில பொதுக்குழு உறுப்பினர் அருணகிரி முன்னிலையில் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அருணகிரி மாவட்ட எஸ்.சி.எஸ்.டி.பிரிவு தலைவர் முருகன் வட்டாரத் தலைவர்கள் சோலை முருகன், இளங்கோ நகரத் துணை தலைவர்கள் சௌந்தரராஜன், குப்புசாமி, சேகர் மற்றும் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பு.