ஆரணியில் பள்ளி கல்வி துறை சார்பில் கலைஞரின் நூற்றாண்டு சட்டமன்ற நாயகர்
கலைஞர் விழாவில் பேச்சு போட்டி பரதநாட்டியம் வில்லு பாட்டு போட்டிகளில்
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர்
கு.பிச்சாண்டி சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள அரசு நிதிஉதவி
பெறும் சுப்பிரமணிய சாஸ்திரியர் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் பள்ளி
கல்வி துறை சார்பில் கலைஞரின் நூற்றாண்டு சட்டமன்ற நாயகர் கலைஞரின் விழா
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர்
கு.பிச்சாண்டி பங்கேற்றார்.
முன்னதாக துணை சபாநாயகர் க.பிச்சாண்டிக்கு பள்ளி கல்வி துறை சார்பில்
மாணவர்கள் பேண்டு வாத்தியம் முழுங்க வரவேற்பு அளிக்கபட்டன.
பின்னர்
முன்னாள் முதல்வர் கருணாநிதி திருவுறுவ படத்திற்கு சட்டமன்ற துணை
சபாநாயகர் கு.பிச்சாண்டி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் இந்த விழாவில் மாணவ மாணவிகளிடையே பேச்சு போட்டி, கவிதை போட்டி,
பரதநாட்டியம், வில்லுபாட்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு
சான்றிதழ் மற்றும் நினைவு கேடயத்தை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி
வழங்கினர்.
இதில் பள்ளி மாணவ மாணவிகள் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.