திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மொழுகம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னபையன் மகன் வெற்றிவேல் (43) ஓய்வு பெற்ற ராணுவ வீரர் இவருக்கும் ஓண்ணுபுரம் கிராமத்தை சேர்ந்த ரேவதி என்பவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பிரியதர்ஷ்னி (17) என்ற மகளும் லிங்கேஸ்வரன் (15) ஸ்ரீதர் (10) என்ற 2 மகன்களுடன் ஆரணி டவுன் தேனருவி நகரில் வசித்து வருகின்றனர்.
மேலும் கடந்த 2022ம் ஆண்டு முன்னாள் ராணுவ வீரர் வெற்றிவேல் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தன்னுடைய தாய் வீடானஓண்ணுபுரம் கிராமத்தில் ரேவதி தனது குழந்தைகளுடன் வசித்து வருகின்றார்.
கடந்த 2022ம் ஆண்டு வெற்றிவேல் விபத்தில் சிக்கி காயமடைந்தார்.இதனையொடுத்து வேலூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மனைவி ரேவதியே வெற்றிவேலை அழைத்து சென்று சிகிச்சை அளித்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
மேலும் கடந்த 2022ம் ஆண்டு அக்-6ந் தேதி விடியற்காலை திடிரென ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வெற்றிவேல் மயக்கநிலையில் உள்ளதாக வெற்றிவேலின் உறவினர்களுக்கு ரேவதி கூறியுள்ளார். உடனடியாக வெற்றிவேலை ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் ஏற்கனவே இறந்தவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஆரணி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவி ரேவதியிடம் கிறுக்குபிடி விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வெற்றிவேலின் தங்கை பொம்மி என்பவரின் கணவர் காமக்கூர் பாளையம் கிராமத்தை சேர்ந்த நாகராஜ்(41) என்பவருடன் டந்த 3ஆண்டுக்கு மேலாக கள்ள தொடர்பில் இருந்து வந்துள்ளதாகவும் இதனையறிந்த கணவர் முன்னாள் ராணுவவீரர் வெற்றிவேல் அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்படுவதாகவும் தனது கள்ளகாதலலுக்கு இடையூறாக உள்ளதால் கூலிபடையை ஏவி தனது கணவனை கொலை செய்ய திட்டுமிட்டுள்ளனர்.
மேலும் கடந்த 2022ம் வருடம் மார்ச் மாதம் முதலே தன்னுடைய கணவனை கூலி படை நபரான கண்ணமங்கலம் அருகே உள்ள மோட்டுபாளையம் பகுதியை சேர்ந்த பாரதீய ஜனதா கட்சி பிரமுகர் ராஜேஷ் (32) என்பவரை அணுகி 10 லட்சம் ரூபாய் பேரம் பேசி அட்வான்சாக 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாகவும் போலீசாரின் விசாரணையில் மனைவி ரேவதி வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
மேலும் விபத்தில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய கணவன் தன் குடும்பத்தடன் தனியாக இருப்பதை பயன்படுத்தி மனைவி ரேவதி தன் கள்ளகாதலன் நாகராஜ் மற்றும் கூலிபடையை சேர்ந்த ராஜேஷ் கியோரை கடந்த 06.10.22 அன்று விடியற்காலையில் வீட்டிற்கு வரவழைத்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வெற்றிவேலின் கழுத்தில் ராஜேஷ் ஓங்கி குத்தியுள்ளார்.
பின்னர் கணவனின் கால்களை மனைவி ரேவதி பிடித்து கொண்ட போது கூலிபடையை சேர்ந்த ராஜேஷ் வெற்றிவேலின் கழுத்தை நெறித்து துடிதுடிக்க கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தன.
இதனையொடுத்து ஓய்வு பெற்ற ராணுவ வீரரை கூலிபடையை ஏவி கொலை செய்த மனைவி ரேவதி இதற்கு உடந்தையாக இருந்த கள்ளகாதலன் காமக்கூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிந்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதில் கூலிப்டை தலைவனும் பாரதீய ஜனதா கட்சி பிரமுகருமான ராஜேஷ் என்பவர் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சரணடைந்தான்.
ஆரணியில் மனைவியே கள்ளகாதலுக்கு இடையூராக இருந்த கணவனை கூலிபடையை ஏவி கொலை செய்த சம்பவம் ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
செய்தியாளர் சு.ஞானப்பண்டிதன்