ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு காலையில் உச்சி கணபதி, மற்றும் ஸ்ரீ பாலமுருகன் ஸ்வாமிகளுக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம்,திருமஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது..

அதனைத்தொடர்ந்து மாலை கோவில் அடிவாரத்தின் கீழே மிக பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள ஆறுகோண தெப்பக்குளத்தில் ஸ்ரீ பாலமுருகன் சுவாமி உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து மலையிலிருந்து மங்கள மேளதாளம் முழங்க பக்தர்கள் சுவாமியை ஊர்வலமாக கொண்டு வந்து தெப்பக்குளத்தில் வைத்து ஸ்ரீ பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் சிறப்பு நாதஸ்வர வாத்தியங்கள் கூடிய மங்கல தீபாரதனையை அறுகோண தெப்பக்குளத்திற்கு காட்டினார்கள் பின்னர் கூடியிருந்த அனைத்து பக்தர்களும் முருகனை மனதில் நினைத்தில் அரோகரா.. அரோகரா.. என பக்தி கோஷங்களை வெளிப்படுத்தி தங்கள் கைகளில் இருந்த அகல் விளக்குகளை தெப்பக்குளத்திற்கு காட்டி முருகனை வழிபட்டு சென்றனர்..
அதைத்தொடர்ந்து மலைமேல் உள்ள பாலமுருகன் சுவாமிக்கு பல்வேறு வகையான சோடா உபசாரங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து தங்கத்தேரில் முருகப்பெருமான் கம்பீரமாக அமர்ந்தபடி கோவில் முழுவதும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து காட்சி அளித்தார்..
ராணிப்பேட்டை செய்தியாளர் அருள்அரசன்