திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மத்திய மாவட்ட அதிமுக சார்பில் தமிழக அரசை கணடித்து கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரி பாபு அனைவரையும் வரவேற்றார்.
ஒன்றிய செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட அவை தலை கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார். மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா தலைமை தாங்கினார்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.க.கட்சி நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் பொன்முடி பெண்கள் பற்றியும் சைவம் வைணவம் குறித்து இழிவாக பேசியது தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து வனத்துறை அமைச்சர் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் தமிழக அரசக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி அதிமுக கட்சியினர் கணடன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட இணை செயலாளர் வனிதா சதிஷ் ஒன்றிய செயலாளர்கள் திருமால், விமல், வக்கீல் சங்கர், மாவட்ட பொருளாளர் அரையாளம் வேலு, மாவட்டம் இளைஞர் அணி செயலாளர் ஆனந்த், நகர மாணவரணி செயலாளர் குமரன், நகர மன்ற உறுப்பினர்கள் சுதா குமார், பானுப்ரியா பாரதிராஜா, கிருபா சமுத்ரி சதிஷ், சிவக்குமார், சசிகலா சேகர், ஏ.ஜி.மோகன், மாவட்ட மீணவரணி செயலாளர் ஆனந்தன், ஒன்றிய அவைத்தலைவர் சேவூர் சம்பத், நிர்வாகிகள் இ.பி.நகர் குமார், புங்கம்பாடி சுரேஷ், மில் சரவணன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு. இறுதியில் நகரச் செயலாளர் அசோக் குமார் நன்றி கூறினார்