தமிழகத்தில் நேற்று விஜய் நடித்த தி கோட் திரைப்படம் வெளியானது. இதனை விஜய் ரசிர்கர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்து காலை முதலே ரசிகர் காட்சி முதல் தொடர்ந்து ஹவுஸ் புல்லாக தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றனர்.
மேலும் ஆரணி டவுன் பகுதியில் உள்ள 3திரையரங்களில் விஜய் நடித்த தி கோட் திரைப்படம் வெளிPட்டு ஓடிகொண்டுருக்கின்றன. நேற்று இரவு காட்சி ஆரணி வெங்கடேஸ்வர தியேட்டரில் பெண்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி சென்றதால் தியேட்டர் ஹவுஸ்புல் காட்சியாக இருந்தன.
மேலும் தி கோட் திரைப்படம் காட்சி ஆரம்பித்து சிறிது நேரத்தில் திரை பழுதுனாதால் சவுண்டு வரவில்லை என்றும் வீடியோ காட்சி வருவதாக கூறி ரசிகர்கள் கூச்சலிட்டனர். ஆனாலும் தொடர்ந்து சவுண்டு இல்லாமல் திரைப்படம் ஓடி கொண்டிருந்ததால் மேலும் ஆத்திரமடைந்த ரசிகர்கள் டிக்கெட் கவுண்டரை முற்றுகையிட்டு தியேட்டர் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவலறிந்த வந்த ஆரணி டவுன் போலீசார் ரசிகர்களை சமசரம் செய்து கவுண்டரில் பெற்ற டிக்கெட்டுக்கு திருப்பி பணம் அளிக்கபட்டது. ஆன்லைனில் புக் செய்த காட்சிக்கு இன்று திரைப்படம் காண்பிக்கபடும் என்று தியேட்டர் நிர்வாகம் தெரிவித்ததால் ரசிகர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
ஆரணியில் விஜய் நடித்த தி கோட் திரைப்படம் வெளியான தியேட்டரில் சவுண்டு பழுதுனாதால் இரவு காட்சி ரத்த செய்யபட்ட சம்பவத்தால் பரபரப்பாக காணப்பட்டன.