திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நெசல் கிராமத்தில் கூலி தொழிலாளி ஆறுமுகம் மஞ்சுளா தம்பதியினருக்கு ராகுல் நேமிகுமார் ஆகிய 2மகன்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் நேமிகுமார்(20) ஐ.டி.ஐ டிப்ளமோ படித்து விட்டு தற்போது வீட்டில் இருந்து வருகின்றார்.
இவர் சில தினங்களுக்கு முன்பு தனது இடுப்பில் அருவாவை எடுத்து தலையை தனியாக எடுத்துவிட்டேன் ஸ்டேஷனில கொடுத்துவிட்டேன் சரணடைந்துவிட்டேன் எல்லா சிறையும் பார்த்துவிட்டேன் என பாடல் மூலம் வீடியோவை ரீல்ஸ் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வளைதலங்களில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் ஆரணி தாலுக்கா போலீசார் அருவாவில் ரீல்ஸ் செய்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் ரீல்ஸ் செய்தது விசாரணையில் தெரிய வந்தன.
பின்னர் ஆரணி தாலுக்கா போலீசார் வழக்கு பதிந்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஆரணியில் அருவாவை கொண்டு ரீல்ஸ் செய்த வாலிபரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.