ஆரணியில் அல்முபின் பள்ளியில் 4வயது மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை.

ஆரணியில் அல்முபின் பள்ளியில் 4வயது மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அல்முபீன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் விளையாட்டு போட்டி விழா பள்ளி நிர்வாக இயக்குநர் பர்வீன் ரியாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளியை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்றனர்.

மேலும் பள்ளி மைதானத்தில் சிறுவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சிலம்பம் சுற்றி அசத்தினார்கள். இதில் ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த மணிகண்டன் தமிழரசு தம்பதியினரின் 4வயது எல்.கே.ஜி. மாணவன் ஜெயவிக்னேஷ் தொடர்ந்து 1மணி நேரம் 30நிமிடம் சிலம்பம் சுற்றி அசத்தினான்.

இதனை இந்தியா புக் ரெக்கார்ட் மற்றும் கலாம் வேல்டு ரெக்கார்டு பிபின் ராவத் ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பிடித்து உலக சாதனை படைத்தான். உலக சாதனை படைத்த சிறுவனை பள்ளி நிர்வாகம் பாராட்டி சான்றிதழ் வழங்கியது.

இதில் பள்ளி தாளாளர் ஏ.எச்.இப்ராஹிம் பள்ளி முதல்வர் நதியாமோகன் உள்ளிட்டோர் பங்கேற்பு.

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..