திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றம்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகில் உள்ள வெங்கட்ராயன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 34). கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இவர் காதலித்து வந்த 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்..
இந்த தகவலை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் மற்றும் செல்வம் ஆகியோர் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோர்களிடம் கூறியுள்ளார்..
மேலும் இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் புகாரின் பேரில் செய்யாறு போலீசார் விசாரணை நடத்தி போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜேஷ்குமார், ராஜசேகர் செல்வம் ஆகியோரை கைது செய்தனர்..
இந்த சம்பவத்தின் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போஸ்கோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நடைபெற்று வந்த சமயத்தில் ராஜசேகர் இறந்துவிட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி நேற்று தீர்ப்பு அளித்தார்..
இதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ராஜேஷ்குமார் செல்வம் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா 1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.